Published : 09 Jan 2015 11:46 AM
Last Updated : 09 Jan 2015 11:46 AM
உத்தராகண்ட் மாநிலத்தின் 6-வது ஆளுநராக கிருஷ்ண காந்த் பால் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அவருக்கு மாநில உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.பிஷ்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்வால், எதிர்க்கட்சித் தலைவர் அஜய் பட், தலைமைச் செயலாளர் என்.ரவிசங்கர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட பிறகு கிருஷ்ண காந்த் பால் கூறும்போது, “ஜனநாயக மதிப்பை பாதுகாப்பதன் மூலம் இந்த பதவிக்கான உயரிய பாரம்பரியத்தை கடைபிடிப்பேன்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT