Published : 28 Jan 2015 08:19 PM
Last Updated : 28 Jan 2015 08:19 PM
பெரிய வணிக நிறுவனங்கள் வளர்ச்சிக்காக மோடி அரசு ஆறு மாத காலமாக செயல்பட்டு வருகிறது. மோடியின் நடவடிக்கைகள் ஏழை, எளிய மக்களின் நலனைப் பாதிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிருந்தா காரத் கூறியதாவது:
''இந்தியாவில் உற்பத்தி என்ற முழக்கத்தை அமெரிக்காவில் என மோடி மாற்றிவிடுவார். பெரிய வணிக நிறுவனங்கள் வளர்ச்சிக்காக மோடி அரசு ஆறு மாத காலமாக செயல்பட்டு வருகிறது
100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை மோடி அரசு முடக்கி வருகிறது. உணவு தானியங்களுக்கான மானியத்தையும் வெகுவாகக் குறைத்துவிட்டது.
மோடியின் நடவடிக்கைகள் சாமானிய ஏழை, எளிய மக்களின் நலனைப் பாதிக்கின்றன.'' என பிருந்தா காரத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT