Published : 18 Jan 2015 01:58 PM
Last Updated : 18 Jan 2015 01:58 PM
திரிபுரா மாநிலத்தில் 10 வயது மகளை உயிருடன் புதைக்க முயற்சித்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். திரிபுராவில் சிபாஹிஜலா மாவட்டத்தில் உள்ள புதியா கிராமத்தில் வசித்து வருகிறார் அபுல் ஹுசேன். இவருக்குத் திருமணமாகி 10 வயதில் மகள் இருக்கிறார்.
தனக்குப் பெண் குழந்தை பிடிக்காததால், தன் மகளை உயிருடன் புதைக்க முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து தன் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் குழந்தையின் கை, கால்களைக் கட்டி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி, தன் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் உயிருடன் புதைத்தார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அண்டை வீட்டார் ஒருவர் போலீஸாருக்குத் தகவல் தந்தார். உடனே சம்பவ இடத்துக்குச் போலீஸார் சென்று சிறுமியை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து அபுல் ஹுசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT