Published : 30 Jan 2015 08:38 AM
Last Updated : 30 Jan 2015 08:38 AM

உஸ்மானியா அரசு மருத்துவமனையில் 12 மருத்துவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஹைதராபாத் உஸ்மானியா அரசு மருத்துவமனையில், பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 12 மருத்துவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளது. நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்ததால், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தற்போது 556 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி சிகிச்சைப் பிரிவுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று உஸ்மானியா மருத்துவ மனையில் 2 பேர், காந்தி மருத்துவமனையில் ஒருவர் என 3 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே உஸ்மானியா மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் சிகிச்சைப் பிரிவில் பணி யாற்றி வந்த 12 மருத்துவர்களுக்கு இந்நோய் தொற்றியுள்ளது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அந்த மருத்துவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உஸ்மானியா மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தெலங்கானா மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் லட்சுமிரெட்டி, உஸ்மானியா அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு செய்தார். பன்றிக் காய்ச்சல் நோயாளிகளிடம், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x