Published : 26 Jan 2015 12:31 PM
Last Updated : 26 Jan 2015 12:31 PM
குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு, விமானப்படையின் அணி கமாண்டர் பூஜா தாக்கூர் தலைமையில் ஒபாமாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதன் மூலம் முப்படை அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை வகித்த முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை பூஜா தாக்கூர் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் கருப்பொருளான ‘பெண்களின் சக்தி’ அமைந்துள்ள நிலையில் அதை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இதுகுறித்து பூஜா தாக்கூர் கூறும்போது, “உலகின் மிக சக்திவாய்ந்த மனிதருக்கு மரியாதை அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதன் மூலம் நான் வரலாறு படைத்துள்ளேன் என்பதை நினைத்து மிகுந்த பெருமை அடைகிறேன்” என்றார்.
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க அதிபருக்கு பெண் அதிகாரி தலைமையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதை அறிந்து, பெண் என்ற முறையில் மிகவும் பெருமிதம் அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT