Last Updated : 01 Dec, 2014 06:46 PM

 

Published : 01 Dec 2014 06:46 PM
Last Updated : 01 Dec 2014 06:46 PM

ஹரியாணாவில் பஸ்ஸில் தொந்தரவு கொடுத்த 3 பேர் கைது: வீர சகோதரிகளுக்கு குடியரசு தினத்தில் ரொக்கப் பரிசு

ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை தைரியமாக தாக்கிய 2 சகோதரிகள் வரும் குடியரசு தினத்தில் கவுர விக்கப்படுவார்கள் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரோட்டக் நகரைச் சேர்ந்த ஆர்த்தி, பூஜா சகோதரிகள் பஸ்ஸில் பயணம் செய்தபோது, அவர்களை 3 இளைஞர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த சகோதரிகள் தைரியமாக அந்த இளைஞர்களை அடித்து விரட்டி உள்ளனர். வரும் குடியரசு தினத்தன்று இந்த சகோதரிகளின் துணிச்சலைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அதேநேரம் பஸ்ஸில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கன்ஸ்லா கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மீதும் பாதிக்கப் பட்ட பெண்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அந்த பெண்களும் கூறியுள்ளனர். இதையடுத்து, குல்தீப், மொஹித் மற்றும் தீபக் ஆகிய 3 இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களை வரும் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத் தார் தங்களை மிரட்டு வதாக அந்தப் பெண்களின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர்களை 24 மணி நேரத்துக்குள் விடுவிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத் துக்கு கன்ஸ்லா கிராம மக்கள் கேடு விதித்துள்ளனர். இருக்கையில் அமர்வது தொடர் பாகவே பிரச்சினை எழுந்த தாகவும், ஆனால் பாலியல் தொந்தரவு செய்ததாக பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் உமா பாரதி கூறும்போது, “பஸ்ஸில் தங்களுக்கு யாரேனும் தொல்லை கொடுத்தால் இந்த சகோதரிகளைப் போல துணிச் சலுடன் செயல்பட வேண்டும். அதேநேரம், இந்த சம்பவத்தில் அந்த சகோதரிகளுக்கு சக பயணிகள் உதவிக்கு வராதது கவலை அளிக்கிறது” என்றார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமார மங்கலம் கூறும்போது, “துணிவுடன் செயல்பட்ட சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இந்த சம்பவத் துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x