Published : 02 Dec 2014 12:36 PM
Last Updated : 02 Dec 2014 12:36 PM
ஆந்திர சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என பேரவைத் தலைவர் கோடெல சிவப்பிரசாத் ராவ் தெரிவித்தார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் கோடெல சிவப்பிரசாத் ராவ், நெல்லூர் மாவட்டம் கூடூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, “அனைவரின் முயற்சிகளால்தான் ஆந்திர மாநிலம் வளர்ச்சி பெறும். இதனை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. வரும் 18-ம் தேதி முதல் குளிர்கால கூட்டத்தொடர் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. வீட்டை மட்டுமின்றி தங்களது கிராமத்தையும், நகரத்தையும் மக்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT