Published : 18 Dec 2014 09:51 AM
Last Updated : 18 Dec 2014 09:51 AM

எல்லையில் அத்துமீறல்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளது.

குப்வாரா மாவட்டம் பஸ்போரா பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அப்பகுதியில் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டது.

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இரு தரப்பில் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x