Published : 07 Dec 2014 10:45 AM
Last Updated : 07 Dec 2014 10:45 AM
கர்நாடகா, ஆந்திராவில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்த வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டிக்கு பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர் ஜனார்தன ரெட்டி. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த அவர் சட்டவிரோதமாக இரும்பு தாதுக் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பெல்லாரி ரெட்டி சகோதரர் களில் மூத்தவரான ஜனார்தன ரெட்டி மீது கர்நாடகத்தில் 5 வழக்குகளும் ஆந்திராவில் ஒரு வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 2011 செப்டம்பர் 5-ம் தேதி சிபிஐ போலீஸார் அவரை கைது செய்தனர். தற் போது பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக நடை பெறும் வழக்குகளில் ஜனார்தன ரெட்டி ஜாமீன் கோரி வருகிறார். இதில் கர்நாடகத்தில் நடைபெற்ற ஐந்து வழக்குகளில் 4 வழக்குகளில் ஏற்கெனவே அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மீதமுள்ள ஒரு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கு மாறு பெங்களூரு சிபிஐ நீதிமன்றத் தில் ஜனார்தன ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சனிக்கிழமை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் நிலுவையில் இருந்த 5 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் அவருக்கு சொந்த மான ஓபலபுரம் சுரங்க நிறுவனம் சட்ட விரோதமாக சுரங்கத் தொழி லில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால் மட்டுமே ஜனார்தன ரெட்டி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT