Published : 09 Dec 2014 10:06 AM
Last Updated : 09 Dec 2014 10:06 AM
முன்னாள் ரயில்வே அமைச்சர் லலித் நராயண் மிஸ்ரா கொல்லப் பட்ட வழக்கில், 39 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு கொலை யாளிகள் 4 பேருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு பிஹார் மாநிலத்தின் சமஸ்திபூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க எல்.என்.மிஸ்ரா சென்றார். சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த மிஸ்ரா, மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தக் கொலை வழக்கில் வழக்கறிஞர் ரஞ்சன் துவிவேதி (சம்பவம் நடந்தபோது இவருக்கு 24 வயது), சந்தோஷ் ஆனந்த அவதூதா, சுதேவானந்த அவதூதா, கோபால்ஜி மற்றும் வழக்கு விசாரணையின் போது இறந்த ஒருவர் என 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் கோபால்ஜி தவிர மற்ற வர்கள், டெல்லியில் 1975ல் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஏ.என்.ரே கொலை முயற்சி வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். இதில் சந்தோஷ் ஆனந்த், சுதேவானந்த் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகளும் துவிவேதிக்கு 4 ஆண்டுகளும் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
பிஹாரில் நடைபெற்றுவந்த எல்.என்.மிஸ்ரா கொலை வழக்கு பின்னர் உச்ச நீதிமன்ற உத்தர வின் பேரில் 1979-ல் டெல்லிக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசார ணையும் சிபிஐ-க்கு மாற்றப் பட்டது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆனந்த மார்க்கம் என்ற இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் தலைவர் ஒருவரை விடுதலை செய்வதற்கு மத்திய அரசை நிர்பந்திக் கும் வகையில் இவர்கள் இத்தாக்கு தலை நடத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.
இந்நிலையில் நீண்ட விசார ணைக்குப் பிறகு டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் மேற்கண்ட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம், இவ்வழக்கில் தண்டனை தொடர்பான விவாதம் வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளிக ளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட லாம் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT