Published : 11 Dec 2014 08:23 PM
Last Updated : 11 Dec 2014 08:23 PM

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நில அதிர்வு: மக்கள் பீதி

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

இன்று மதியம் 1.45-1.50 மணிகளுக்கு இடையெ ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் சாந்தபொம்மலி மற்றும் சர்வகோட்டா ஆகிய மண்டலங்கள் உட்பட பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் பதறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். 10 வினாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்தது.

நிலநடுக்கம் மிதமானது என்பதால் சேதங்கள் எதுவும் இல்லை. இருந்த போதிலும் உள்ளூர் போலீஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x