Published : 31 Dec 2014 11:27 AM
Last Updated : 31 Dec 2014 11:27 AM

கிராம சுகாதார செவிலியர் மீது ஆசிட் வீச்சு

திருச்செங்கோடு அருகே கிராம சுகாதார செவிலியர் மீது மர்மநபர்கள் ஆசிட் ஊற்றியதில் அவர் உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர். இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு அருகே மாணிக் கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாரி (50). இவர் இலுப் புலி கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை இலுப்புலி கிராமத்தில் இருந்து மாணிக்கம்பாளையத் துக்கு நாராயணன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாணிக்கம் பாளையம் அருகே பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், விஜயகுமாரி மீது ஆசிட் ஊற்றி அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர்.

ஆசிட் பட்டதில் கிராம சுகாதார செவிலியர் விஜயகுமாரி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நாராயணன் என்பவரது முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ள கிராம சுகாதார செவிலி யரை, மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணா மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x