Published : 07 Dec 2014 10:48 AM
Last Updated : 07 Dec 2014 10:48 AM

பாக். தாக்குதலில் அல் காய்தா மூத்த தலைவர் பலி

பாகிஸ்தானில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அல் காய்தா அமைப்பின் மூத்த தலைவர் அட்னான் எல் சுக்ரிஜுமா கொல் லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு நியூயார்க்கின் ரயில்வே சுரங்கப் பாதையை தகர்க்க நடை பெற்ற முயற்சியில் அல் காய்தா வின் மூத்த தலைவர் அட்னான் எல் சுக்ரிஜுமா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியுள்ளது. அவரைப் பற்றிய துப்பு கொடுப் போருக்கு 5 மில்லியன் டாலர் சன் மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரிட் டனில் நடைபெற்ற தீவிரவாதச் செயல்கள் தொடர்பாகவும் சுக்ரிஜுமா தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், தெற்கு வஜிரிஸ்தானில் நடைபெற்ற தாக்கு தலின்போது சுக்ரிஜுமா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட தாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இதை பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அசிம் பாஜ்வா உறுதி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x