Published : 07 Dec 2014 10:48 AM
Last Updated : 07 Dec 2014 10:48 AM
பாகிஸ்தானில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அல் காய்தா அமைப்பின் மூத்த தலைவர் அட்னான் எல் சுக்ரிஜுமா கொல் லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு நியூயார்க்கின் ரயில்வே சுரங்கப் பாதையை தகர்க்க நடை பெற்ற முயற்சியில் அல் காய்தா வின் மூத்த தலைவர் அட்னான் எல் சுக்ரிஜுமா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியுள்ளது. அவரைப் பற்றிய துப்பு கொடுப் போருக்கு 5 மில்லியன் டாலர் சன் மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரிட் டனில் நடைபெற்ற தீவிரவாதச் செயல்கள் தொடர்பாகவும் சுக்ரிஜுமா தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தெற்கு வஜிரிஸ்தானில் நடைபெற்ற தாக்கு தலின்போது சுக்ரிஜுமா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட தாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இதை பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அசிம் பாஜ்வா உறுதி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT