Published : 30 Dec 2014 10:20 AM
Last Updated : 30 Dec 2014 10:20 AM
மும்பையில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கிப் பறந்த விமானத்தின் மீது பறவை மோதி தீப்பிடித்ததால் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. எனினும் இதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மும்பையில் இருந்து 125 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் காத்மாண்டு நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது லலித்பூர் அருகே இமடோல் எனும் பகுதியில் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால் விமானத்தின் ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமான நிலைய பொறி யாளர்களால், விமானத்தில் ஏற் பட்ட தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவர்கள் விமானம் பாதுகாப்பாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்த பின் மீண்டும் இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT