Published : 05 Dec 2014 06:04 PM
Last Updated : 05 Dec 2014 06:04 PM
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
"பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கு வருகை தருகிறார். எந்த பிரச்சினை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறதோ, எது குறித்து காஷ்மீர் மக்களுக்கு கேள்விகள் உள்ளதோ அந்தப் பிரச்சினைகள் குறித்து அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக்குவார் என்று நம்புகிறோம். ஒரு காஷ்மீரியாக அரசியல் சாசனம் 370-ஆம் பிரிவு குறித்து அவரது நிலைப்பாடு என்னவென்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
தனது தாத்தா மற்றும் முன்னாள் ஜம்மு முதல்வர் ஷேக் முகமது அப்துல்லா பிறந்த தினத்தையொட்டி அனுசரிக்கப்பட்ட பிரார்த்தனைகளின் போது அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
இந்த ஷரத்தை நீக்குவதாக லோக்சபா தேர்தலின் போது பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது, ஆனால் இன்று ஜம்மு காஷ்மீர் தேர்தலை கவனத்தில் கொண்டு அது பற்றி பேசாமல் மவுனம் சாதித்து வருகிறது என்றார் அவர்.
“பாஜக இதற்கு முன்பாக 370-ஆம் ஷர்த்தை வைத்தே தேர்தல்களில் போட்டியிட்டது. மக்கள் அதனை வெற்றிகரமாக்கிவிட்டால் 370ஆம் பிரிவை திரும்பப் பெறுவதாக கூறிவந்தது.
ஜிதேந்திர சிங் அமைச்சரானவுடன் இந்த ஷரத்தை திரும்பப் பெறுவதற்கான விவாதங்கள் தொடங்கி விட்டதாக கூறினார். இப்போது ஜம்மு காஷ்மீர் வாக்குகளை கணக்கில் கொண்டு இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கப்படுகிறது” என்றார் உமர் அப்துல்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT