Last Updated : 10 Dec, 2014 10:42 AM

 

Published : 10 Dec 2014 10:42 AM
Last Updated : 10 Dec 2014 10:42 AM

கல்வியில் மதவாதம்: பாஜக மீது மார்க்சிஸ்ட் புகார்

கல்வியில் மதவாதத்தை புகுத்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முயற்சிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

'கல்வியில் மதவாதத்தை புகுத்தும் முயற்சியை நிறுத்துங் கள்' என்ற தலைப்பிலான சிறு புத்தகம் ஒன்றை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், பாடத்திட்டங்களில் தவறான தகவல்களை அளித்தும், பொய் யான கட்டுக்கதைகளை கூறியும் ஆட்சி அதிகாரத்தில் தொடர பாஜக முயற்சிக்கிறது.

தங்களின் சித்தாந்தங்களை இளைய தலை முறையினரிடையே புகுத்துவதற்கு கல்வியை பயன்படுத்த பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிக் கின்றன. அதன் மூலம் நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்ற அவர்கள் விரும்புகின்றனர்.

அதே போன்றுதான், முன்பு ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரும், கல்வியில் இனவெறிக் கொள்கையை புகுத்தி மாணவர்களின் எதிர் காலத்தை பாழாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x