Published : 12 Dec 2014 03:33 PM
Last Updated : 12 Dec 2014 03:33 PM

சமையல் செய்தபோது பரிதாபம்: வெடிமருந்து வெடித்ததில் 2 சகோதரிகள் பலி

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சமையல் செய்த 2 சகோதரிகள் வெடி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளிஆதிநாராயணா. இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு நரசம்மா (13), கீர்த்தி வாணி (7) என்கிற இரு மகள்களும், யோகி (5) என்கிற மகனும் உள்ளனர்.

ஆதிநாராயணா சில ஆண்டு களுக்கு முன்பு பிழைப்பு தேடி குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றார். கல் குவாரியில் கூலி வேலை செய்து வரும் ஆதிநாரா யணாவும் ஹேமலதாவும் நேற்று காலை வேலைக்கு சென்றனர். வீட்டிலிருந்த மூத்த மகள் நரசம்மா மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது, மற்ற இருவரும் வீட்டில் வைத்திருந்த ஜெலடின் குச்சிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி உள்ளனர். இதில் சில குச்சிகள் அடுப்பில் விழுத்து பயங்கர சத்ததுடன் வெடித்தது. இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

காயமடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் ஹைதராபாத் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரசம்மா, கீர்த்தி வாணி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வரும் யோகியின் நிலைமையும் கவலைக்கிடமாகஉள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு காவல் துறை ஆய்வாளர் வெங்கடேஸ்வருலு மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜவஹர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x