Published : 17 Dec 2014 10:15 AM
Last Updated : 17 Dec 2014 10:15 AM

பிஹாரில் கார் - ரயில் மோதல் ஐந்து பேர் பலி

பிஹார் மாநிலம், நெவாதா மாவட்டத்தில் கார் மீது ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

நெவாதா மாவட்டம், சபிகஞ்ச் பகுதியில் ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ஹவுராவிலிருந்து கயா நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இதில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். மேலும் ஒருவர் மருத்து வமனையில் உயிரிழந்தார். படு காயமடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அவர்களின் உடல் நிலை, மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரி வித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு நிவாரண நிதியாக ரூ. 2.5 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x