Last Updated : 24 Dec, 2014 11:01 AM

 

Published : 24 Dec 2014 11:01 AM
Last Updated : 24 Dec 2014 11:01 AM

‘தூய்மை இந்தியா’ பணி தொடங்கிய பாலிவுட் பாடகர் கைலாஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

‘தூய்மை இந்தியா’ இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பாலிவுட் பாடகர் கைலாஷ் கெர்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு பிரதமர் நியமித்த 9 பிரபலங்களில் கைலாஷும் ஒருவர்.

இந்நிலையில் கைலாஷ் கெர் நேற்றுமுன்தினம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள பதைனி காட் பகுதியில் துடைப்பம் ஏந்தி தூய்மைப் பணி மேற் கொண்டார். பிரதமரின் தூய்மை இந்தியா இயக்கத்துக்கு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் அவர் பாடல்களையும் பாடினார்.

அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரதமர் தனது உன்னத திருப்பணியில் எனக்கும் இடம் அளித்தது, எனக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுகிறேன்” என்றார்.

பிரதமரின் மக்களவை தொகுதியான வாரணாசியில் பதைனி காட், அஸ்ஸி காட், கங்கா மஹால் காட் துளசி காட் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தூய்மை இந்தியா இயக்கத்தை கைலாஷ் பிரபலப்படுத்தினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் இணையதளத்தில், “தூய்மை இந்தியா இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கைலாஷை பாராட்டுகிறேன். அவரது இந்த முயற்சி போற்றுவதற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x