Last Updated : 26 Dec, 2014 09:52 AM

 

Published : 26 Dec 2014 09:52 AM
Last Updated : 26 Dec 2014 09:52 AM

பாஜக-வுடன் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை: உமர் அப்துல்லா மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக-வுடன் தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் நடத்தியது என்ற செய்திகளை உமர் அப்துல்லா கடுமையாக மறுத்துள்ளார்.

தேர்தலில் 15 இடங்கள் வென்ற தேசிய மாநாடு, 25 இடங்கள் வென்ற பாஜக-வை ஆதரித்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக நேற்று செய்திகள் எழுந்தன.

ஆனால், உமர் அப்துல்லா தனது ட்விட்டரில் இதனை கடுமையாக மறுத்துள்ளார்:

“பாஜக-தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் பற்றி நிறைய கதைகள் புழங்கி வருகின்றன. நான் வலிமையாகக் கூறுகிறேன், அப்படிப்பட்ட உடன்பாடோ, பேச்சுவார்த்தைகளோ நடைபெறவில்லை.” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பதிவில், “மக்கள் ஜனநாயகக் கட்சி/பாஜக/காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து யாராவது ஒருவர் ஆட்சியமைக்க முன்னெடுப்பு செய்யலாம். வரவர மடத்தனமான வதந்திகளை மறுப்பதே முழு நேர வேலையாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x