Published : 17 Dec 2014 10:18 AM
Last Updated : 17 Dec 2014 10:18 AM

பெங்களூருவில் பாதுகாப்பு அதிகரிப்பு

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு விடுத்த மிரட்டல் எதிரொலியாக பெங்களூருவில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஷாப்பிங் மால், திரையரங்குகள், கோயில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே செவ்வாய்க் கிழமை அதிகாலை ஹைதராபாத் தில் இருந்து பெங்களூரு ரயில் நிலையம் வந்த பயணி ஒருவரையும், சிவாஜிநகர் பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த இளைஞரையும் பிடித்தும் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x