Published : 16 Dec 2014 02:49 PM
Last Updated : 16 Dec 2014 02:49 PM
கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது ஏற்புடையதல்ல என நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
கட்டாய மதமாற்றம் தொடர்பாக பிரதமர் விளக்கம் கோரி எதிரக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கய்ய நாயுடு: "கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது ஏற்புடையதல்ல.
நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் பேணப்பட வேண்டுமே தவிர அரசியல் நடத்தக்கூடாது. இவ்விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க அவசியமில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT