Published : 16 Dec 2014 12:48 PM
Last Updated : 16 Dec 2014 12:48 PM

கருப்பு பண பதுக்கல்: உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

கருப்பு பண பதுக்கலில், உலகளவில் இந்தியாவுக்கு 3-வது இடம் என ஜி.எஃப்.ஐ. என்ற சர்வதேச அமைப்பு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பதுக்கப்பட்ட கருப்பு பணத்தின் அளவு 440 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் ரூ 6 லட்சம் கோடி, இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணம் பதுக்கலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் ரஷ்யா உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x