Last Updated : 29 Dec, 2014 10:00 AM

 

Published : 29 Dec 2014 10:00 AM
Last Updated : 29 Dec 2014 10:00 AM

வட மாநிலங்களை வாட்டும் உறைபனி: 55 விமானங்கள், 70 ரயில்கள் தாமதம்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களை உறைபனி மூடியுள்ளது. இதனால் நேற்று 55 விமானங்கள், 70 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, காஷ்மீர் உட்பட வட மாநிலங்கள் முழுவதும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 17 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. இதனால் அந்த மாநிலத்தில் பல்வேறு ஏரிகள் உறைந்துள்ளன. நகரில் உள்ள தால் ஏரியின் ஒரு பகுதி பனிக்கட்டியாக மாறியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று 2.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. பொழுது விடிந்த பின்னரும் டெல்லி முழுவதும் உறைபனி மூடியிருந்தது.

பனிப்பொழிவு காரணமாக வட மாநிலங்கள் முழுவதும் 18 மணி நேரம் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான சேவையும் பாதிப்பு

உறைபனி காரணமாக கடந்த சில வாரங்களாக விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x