Published : 19 Dec 2014 12:45 PM
Last Updated : 19 Dec 2014 12:45 PM
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே செயல்பட்ட போலி மதுபான ஆலையை கடந்த 13-ம் தேதி இரவு போலீஸார் சுற்றி வளைத்து, 7,595 லிட்டர் எரிசாராயம் உள்ளிட்ட பொருட்கள், உப கரணங்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 4 பேரைத் தேடி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை அருகே செயல்பட்ட போலி மதுபான ஆலை தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், 2 சப்-இன்ஸ் பெக்டர்கள் உட்பட 17 போலீஸார் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் வாசுகி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோரை புதுக் கோட்டை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, 15 போலீசாரையும் இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT