Published : 24 Dec 2014 11:04 AM
Last Updated : 24 Dec 2014 11:04 AM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 4 வீரர்கள் கைது: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர் கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங் களவையில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், இந்த ஆண்டில் மட்டும் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 2012-ல் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது சட்டப்படியும் உரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றவர்களின் வழக்குகள் சிவில்-ராணுவ நீதிமன்றங் களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு, “நமது நாட்டுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளை முறிய டிக்க தனிப்பிரிவை ராணுவம் அமைத்தி ருக்கிறது. இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடும் ராணுவ வீரர்களை கண்டறிந்து தடுக்கும்வகையில் விழிப் புடன் செயல்படுமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்று மனோகர் பாரிக்கர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x