Published : 09 Dec 2014 03:31 PM
Last Updated : 09 Dec 2014 03:31 PM
பாஜக ஆட்சி மீது குறைகூறுவதற்கு ஒன்றும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன் வைக்க வாதங்கள் இல்லாமல் மக்களவை தேர்தலின்போது பேசியதையே பேசிக் கொண்டிருக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவை 4-ம் கட்ட தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "பாஜக ஆட்சி மீது குறைகூறுவதற்கு ஒன்றும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன் வைக்க வாதங்கள் இல்லாமல் மக்களவை தேர்தலின்போது பேசியதே பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சியினர் சோர்வடைந்துள்ளனர்.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால், தாது வளங்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலம் அதன் மூலம் விரைவில் ஆதாயம் பெறும்.
இங்கு நிலக்கரி வளம் நிறைந்திருக்கிறது. நீங்கள் கருப்பு வைரத்தின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். அந்த வைரத்தால் உங்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்வேன். அதற்கு ஜார்க்கண்ட் மக்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. ஜார்க்கண்ட் தேர்தலில், பாஜகவை மக்கள் பெரும்பான்மை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT