Published : 17 Dec 2014 10:26 AM
Last Updated : 17 Dec 2014 10:26 AM

தெலங்கானாவில் அமைச்சரவை விரிவாக்கம்

தெலங்கானா மாநிலத்தில் நேற்று புதிதாக 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் உட்பட இதுவரை 12 பேர் அமைச்சர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மேலும் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் நரசிம்மன் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் நாகேஸ்வர ராவ், இந்திரகிரண் ரெட்டி, ஸ்ரீநிவாஸ் யாதவ், லட்சுமி ரெட்டி, அஜ்மீரா சந்தாலால், கிருஷ்ணாராவ் ஆகிய 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x