Published : 12 Dec 2014 01:09 PM
Last Updated : 12 Dec 2014 01:09 PM
காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடந்த அரசு விழாவில் புகழாரம் சூட்டப்பட்டதாக, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, கோட்சே சர்ச்சை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதனை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் நிராகரித்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 'ஹே ராம்' என்ற கோஷ்ம் எழுப்பியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால், அவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மகாத்மா காந்தியை கொலை செய்தவரை புகழ்வது கண்டிக்கத்தக்கது என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT