Published : 23 Dec 2014 01:22 PM
Last Updated : 23 Dec 2014 01:22 PM

சீன எல்லை வரை ரயில்: மக்களவையில் அறிவிப்பு

சீன எல்லை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மக்களவையில் நேற்று முதல்முறையாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பது:

சீன எல்லையில் 4 முக்கிய இடங்களுக்கு புதிதாக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு அமைச் சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு ரயில் போக்குவரத்து ஏற்படுத்தும் திட்டமில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x