Last Updated : 24 Dec, 2014 11:25 AM

 

Published : 24 Dec 2014 11:25 AM
Last Updated : 24 Dec 2014 11:25 AM

வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும்: பிக்கி புதிய தலைவர் கோரிக்கை

வட்டி விகிதங்களை 1 முதல் 2 சதவீதம் வரை குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிக்கியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோத்ஸ்னா சூரி (Jyotsna Suri) தெரிவித்திருக்கிறார். வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதால்தான் முதலீடுகள் வரவில்லை. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.

நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும், ஆனால் இந்த வட்டி விகிதத்தில் அது முடியாது. அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். சூரி கடந்த வாரம் பிக்கி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட்டி குறைப்பு செய்ய வேண்டிய நேரம் இருந்தாலும், குறைவான வட்டி குறைப்பினால் எந்த பலனும் இருக்காது. ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலான வட்டி குறைப்பினை பற்றி ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். மேலும் சரக்கு மற்றும் சேவை வரியை சீக்கிரம் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும் என்றார்.

ஜோத்ஸ்னா சூரி, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். கடந்த டிசம்பர் 2-ம் தேதி தற்போதைய வட்டி விகிதமே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்போதைக்கு ரெபோ விகிதம் 8 சதவீதமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x