Published : 24 Dec 2014 11:00 AM
Last Updated : 24 Dec 2014 11:00 AM

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

சுவாச குழாயில் நோய்த் தொற்று காரணமாக சோனியா காந்தி கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக் கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் அரூப் குமார் பாஸு தலைமையிலான குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து சோனியா நேற்று வீடு திரும்பினார்.

“அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து ஓய்வு எடுக்கும் படியும், மருந்துகள் எடுத்துக் கொள்ளுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று மருத்துவமனையின் நிர்வாகக்குழு தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x