Last Updated : 25 Dec, 2014 02:52 PM

 

Published : 25 Dec 2014 02:52 PM
Last Updated : 25 Dec 2014 02:52 PM

டெல்லியில் பனி மூட்டத்தால் 25 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 2 பேர் பரிதாப பலி, 25 பேர் காயம்

டெல்லிக்கு அருகே உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக சுமார் 25 வாகனங்கள் நேற்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 2 பேர் பலியாயினர்.

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் டெல்லியின் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று காலையிலும் கடும் பனி மூட்ட மாக இருந்தது.

இந்நிலையில், நொய்டா-கிரேட்டர் நொய்டா இடை யிலான யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் சென்ற சுற்றுலா பஸ், கார்கள் உள்ளிட்ட சுமார் 25 வாகனங்கள் அடுத் தடுத்து மோதிக்கொண்டன. இதில் 2 பேர் பலியானதுடன், 25 பேர் காயமடைந்தனர்.

சாலையில் சென்று கொண் டிருந்த ஒரு கார், முந்திக்கொண்டு போக முற்பட்டதாகவும், அப்போது பனி மூட்டமாக இருந்ததால் போதுமான வெளிச்ச மின்மை காரணமாக அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதிக் கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலை சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு மதியம் மீண்டும் போக்கு வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x