Last Updated : 12 Apr, 2014 12:57 PM

 

Published : 12 Apr 2014 12:57 PM
Last Updated : 12 Apr 2014 12:57 PM

ஜஸ்வந்தின் மகன் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மான்வேந்தர் சிங், பாஜகவில் இருந்து வியாழக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது குறித்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் அசோக் பிரணாமி ‘தி இந்து’விடம் கூறுகையில், “மான் வேந்தர் கட்சியில் இருந்து தற்காலிக மாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. கட்சியின் முக்கிய அமைப்பான தேசிய நிர்வாகக் குழுவில் இருந்தும் மான்வேந்தர் நீக்கப்பட்டுள்ளார்” என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில், ஷியோ தொகுதியில் இருந்து மான்வேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பார்மரில் சுயேச் சையாகப் போட்டியிடும் தனது தந்தை ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துவந்தார். இங்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மான்வேந்தர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

2004-ல் பாஜக சார்பில் மக்களவைக்கு முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மான்வேந்தர். ஆனால் அடுத்துவந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சோனெராம் சௌத்ரியிடம் தோல்வி அடைந்தார். இப்போது, சோனேராம் பாஜகவில் இணைந்து பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x