Published : 08 Dec 2014 11:45 AM
Last Updated : 08 Dec 2014 11:45 AM
அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக் கருத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி "ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்" என்றார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இரு அவைகளிலும் பிரதமர் விளக்கமளித்தார். இருப்பினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்றும், அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக் கருத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT