Published : 16 Dec 2014 11:31 AM
Last Updated : 16 Dec 2014 11:31 AM

மகளிர் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் தகவல்

மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குறிப்பிட்ட ரயில்களின் 100 மகளிர் பெட்டிகளில் விரைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

சென்னை ஐ.சி.எப். ஆலை அளித்துள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x