Published : 24 Dec 2014 03:17 PM
Last Updated : 24 Dec 2014 03:17 PM
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தோல்வியடைந்ததை அடுத்து தனது கடிதத்தை முதல்வர் ஒமர் அப்துல்லா மாநில ஆளுநரிடம் வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பபேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவும் மக்கள் ஜனநாயக கட்சியும் ஏறக்குறைய சரிசமமான இடங்களில் பெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி அமையும் நிலை உறுதியாகியுள்ளது. ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் பதவியை உமர் அப்துல்லா ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் என்.என்.வோராவிடம் இன்று(புதன்கிழமை) ஒமர் அப்துல்லா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீரில் எத்தகைய அரசு அமைய போகிறது என்பதை நான் கூர்ந்து கவனிக்கிறேன். என்ன நடக்க போகிறது என்பதை அனைவரும் பார்க்கப் போகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT