Published : 17 Dec 2014 02:02 PM
Last Updated : 17 Dec 2014 02:02 PM
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப எரிபொருள் நிறுவனங்கள் மறுத்துவிட்டதால், அந்நிறுவனத்தின் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை முடங்கியுள்ளது.
இது குறித்து ஸ்பைஸ் ஏர்லைன்ஸ் செய்தியாளர், "விரைவில் விமான சேவை சீரடையும்" என்று கூறினார்.
ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு கடனுக்கு எரிபொருள் நிரப்புமாறு எரிபொருள் நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியிருந்தது.
இருப்பினும், ரூ.2000 கோடி நிதிச் சுமையில் சிக்கியுள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்கு எந்த எரிபொருள் நிறுவனமும் முன்வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT