Published : 17 Dec 2014 01:12 PM
Last Updated : 17 Dec 2014 01:12 PM

சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது: திரிணமூல்

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் உறுப்பினர்கள் அவைக்கு வரும்போது வாயில் கருப்பு துணி கட்டி வந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசியபோது, “அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. அவையில் திரிணமூல் உறுப்பினர்களை பேச விடாமல் மைக் அணைக்கப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x