Published : 12 Nov 2014 12:05 PM
Last Updated : 12 Nov 2014 12:05 PM

கே.எல்.ஓ. பயங்கரவாத அமைப்புக்கு தடை

தனிநாடு கேட்டு, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவரும் கே.எல்.ஓ (Kamatapur Liberation Organisation) அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ் இந்த அமைப்பு மற்றும் இதன் அனைத்து பிரிவுகளும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கே.எல்.ஓ. 1993-ல் தொடங்கப் பட்டது. அசாம் மாநிலத்தின் 14 மாவட்டங்கள், மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்களில் அமைப்புரீதியாக செயல்படுகிறது. உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x