Last Updated : 03 Apr, 2014 11:57 AM

 

Published : 03 Apr 2014 11:57 AM
Last Updated : 03 Apr 2014 11:57 AM

நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு கோரி காங்கிரஸ் மனு

மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

மீரட் மாவட்ட தேர்தல் அலுவ லர் மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மீரட் தொகுதியில் போட்டியிடும் திரைப்பட நடிகை நக்மாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், அவருக்கு வழங்கப்படும் பாது காப்பை பலப்படுத்த வேண்டும்.

தற்போது மீரட் மாவட்ட நிர்வா கம் சார்பில் அளிக்கப் பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை. எனவே, நக்மாவின் பிரச்சாரத்திற்குச் செல்லும்போது கூடுதலாக காவலர்களை பாதுகாப் புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி, மீரட்டில் பிரச்சாரத்திற்குச் சென்ற நக்மாவை இளைஞர் ஒருவர் சீண்டினார். இதனால், கோபத்திற்கு உள்ளான நக்மா, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். இதைத் தொடர்ந்து, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x