Last Updated : 04 Nov, 2014 04:22 PM

 

Published : 04 Nov 2014 04:22 PM
Last Updated : 04 Nov 2014 04:22 PM

அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

சர்வதேச எல்லைப்பகுதி அமைந்திருக்கும் அருணாச்சலப் பிரதேச எல்லையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.90 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்திய - சீன சர்வதேச எல்லையில் உள்ள மகோ-திங்பூ இடையே சாலை அமைப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. ஆனால், இந்த சர்வதேச எல்லையில் இரு நாட்டுக்கும் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அங்கு வளர்ச்சிப் பணிகளை இந்திய அரசு மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து, அருணாச்சலப் பிரதேசத்துக்கு உட்பட்ட சீன எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை செய்ய உரிமை உண்டு என்றும், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x