Published : 15 Nov 2014 03:00 PM
Last Updated : 15 Nov 2014 03:00 PM

சாரதா சீட்டு மோசடியில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்க: குணால் கோஷ்

சாரதா சீட்டு நிறுவன மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யுங்கள் என்று தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா சீட்டு நிறுவனம், முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக சிட் பண்ட் நிறுவன தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ் எம்.பி.க்கு தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உடனே கட்சி மேலிடம், அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது.

சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. குணால் கோஷ், வெள்ளிக்கிழமை 58 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட குணால் கோஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாரதா சீட்டு நிறுவன மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x