Published : 14 Jul 2019 07:18 AM
Last Updated : 14 Jul 2019 07:18 AM

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வாருங்கள்: விஐபி பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்

சாமானிய பக்தர்களை கருத்தில் கொண்டு விஐபி பக்தர்கள் இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க வர வேண்டும் என திருப்பதி தேவஸ் தான அறங்காவலர் குழு தலை வர் ஒய்.வி. சுப்பா ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை சாதாரண நாட்களில் தினமும் 65 முதல் 70 ஆயிரம் பக்தர்களும், விசேஷ நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். இதில் சாமா னிய பக்தர்கள் தர்ம தரிசனம், மற்றும் திவ்ய தரிசனம் (மலைப் பாதையில் நடந்து வரும் பக்தர் களுக்கானது) மூலம் சுவாமியை தரிசிக்கின்றனர். மேலும் பலர் ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் முன் பதிவு செய்தும் ஏழுமலையானை வழிபடுகின்றனர். இவை தவிர, சுப்ரபாதம் முதல் இரவு ஏகாந்த சேவை வரையிலும் மற் றும் வாராந்திர, மாதாந்திர சேவை களிலும் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

இதில் மிக முக்கியப் பிரமுகர் களுக்காக தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசன ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதிலும், எல்-1 (லிஸ்ட் -1), எல்-2, எல்-3 என 3 வகையாக விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். விஐபி பிரேக் தரிசனத்தால் சாமானிய பக்தர்கள் ஏழுமலையானை தரி சிக்க தடங்கல் ஏற்படுவதாக புகார் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் எலும்பு சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அறங்காவ லர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு இலவச சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சிகிச்சையின் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுப்பா ரெட்டி கூறும்போது, “இந்த எலும்பு சிகிச்சை மருத்துவ மனையை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றப்படும். தற்போது 8 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. மேலும் 4 அறுவை சிகிச்சை அரங்குகள் கட்டப்படும்” என்றார்.

அப்போது விஐபி பிரேக் தரி சனம் ரத்து குறித்து செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சுப்பா ராவ், “விரைவில் விஐபி பிரேக் தரிசனத்தில் உள்ள எல்-1, எல்-2, எல்-3 முறை முழுவது மாக ரத்து செய்யப்படும். இத னால் சாமானிய பக்தர்கள் கூடு தல் எண்ணிக்கையில் சுவாமியை தரிசிக்க இயலும். ஆதலால் விஐபி பக்தர்கள் இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுவாமியை தரிசிக்க வர வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x