Published : 14 Jul 2019 08:13 AM
Last Updated : 14 Jul 2019 08:13 AM
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கும்பல் கொலை என்பது ஒரு கொடிய நோய் போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது. குறுகிய காலத்துக்குள்ளாகவே, இந்த கும்பல் கொலையால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ, இந்த விஷயத்தில் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருவது வேதனையளிப்பதாக உள்ளது. மத்திய மற்றும் சில மாநில அரசுகளின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக கும்பல் கொலைகள் பெருகி வருகின்றன.
இந்நிலையில், இதனை தடுக்கும் விதமாக, உத்தரபிரதேச சட்ட ஆணையத்தின் சார்பில் சட்ட மசோதா ஒன்று அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், கும்பல் கொலையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும்.
இந்த சட்ட மசோதாவை உத்தரபிரதேச அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கும்பல் கொலையை தடுக்க நாடு தழுவிய அளவிலான புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT