Published : 14 Jul 2019 07:55 AM
Last Updated : 14 Jul 2019 07:55 AM
வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு முதல் ரஃபேல் விமானம் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு முதல் ரஃபேல் போர் விமானம் வழங்கப்படுகிறது.
அதன் பின்னர், அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக மீதமுள்ள ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT