Published : 13 Jul 2019 12:50 PM
Last Updated : 13 Jul 2019 12:50 PM
காஷ்மீர் பிரிவினைவாதிகள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று ஜம்முவிலிருந்து செல்லும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1931, ஜூலை 13 அன்று டோக்ரா மகராஜாவின் படைகள் ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலையின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏராளமானோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாகவே இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆனால் மாநில அரசு அதிகாரபூர்வமாக 1947ல் சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்கும் வகையில் நாள் மாநில அரசு தியாகிகள் தினத்தை அனுசரிக்கிறது.
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வரும் பாத யாத்திரை இந்த ஆண்ட ஜூலை 1ல் தொடங்கியது. இதுவரை 1.50 லட்சம் யாத்திரீகர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொண்டுள்ளனர்.
சிவபெருமானின் புராண சக்திகளைக் குறிக்கும் விதமாகவே குகைக் கோவில் உள்ள பனியிலான லிங்க அமைப்பு உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய்பிறை காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது
யாத்ரீகர்கள் 14 கி.மீ நீளமுள்ள பால்டால் மலையேற்றத்திலிருந்து அல்லது 45 கி.மீ நீளமுள்ள பஹல்காம் மலையேற்றத்தின் வழியாக இந்த ஆலயத்தை அணுகலாம்.
இந்த இரண்டு வழிகளை அடிப்படையாகக் கொண்ட முகாம்களிலிருந்தும் யாத்ரீகர்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகள் உள்ளன. 1850ல் அமர்நாத் குகைக் கோயிலைக் கண்டுபிடித்தவர் ஒரு முஸ்லிம் ஆடு மேய்ப்பவரான பூட்டா மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடத்தில் ஒரு சூஃபி துறவி தோன்றி மேய்ப்பருக்கு ஒரு பைநிறைய கரியை வெகுமதியாக அளித்ததாகவும், பின்னர் அது தங்கமாக மாறியதாகவும் இப்பகுதியில் ஒரு புராணக்கதை நிலவுகிறது.
மேய்ப்பரின் சந்ததியினர் 150 ஆண்டுகளுக்கும் மேலாக குகை ஆலயத்திலிருந்து பிரசாதங்களில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15ஆம் தேதி குகைக்கோவிலில் நடைபெறும் பூர்ணிமா பண்டிகையுடன் நிறைவடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT