Published : 10 Jul 2019 09:59 AM
Last Updated : 10 Jul 2019 09:59 AM
காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ராகுல் காந்தி ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த்தன் துவிவேதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மூத்த தலைவரு மான ஜனார்த்தன் துவிவேதி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் காங் கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தது பாராட்டுக் குரியது. கட்சியின் மற்ற தலைவர் களுக்கு இது முன் மாதிரியாக உள்ளது. காங்கிரஸுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார். இப்போது அவர்தான் தலைவராக உள்ளார்.
காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக ஒரு குழுவை ராகுல் காந்தி அமைக்க வேண்டும். அவ்வாறு குழு அமைத்தால் அக்குழுவினர் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்களுடன் ஆலோசித்து புதிய தலைவரை ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
இவ்வாறு ஜனார்த்தன் துவிவேதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT