Last Updated : 08 Nov, 2014 02:17 PM

 

Published : 08 Nov 2014 02:17 PM
Last Updated : 08 Nov 2014 02:17 PM

இராக் அகதிகள் முகாமுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பயணம்

இராகில் போரால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் யாஷிதி இனமக்களை ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்திக்க உள்ளார்.

இராக்கில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் யாஷிதி இன மக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பகுதிகள் கிளர்ச்சியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இராக் சென்று அங்கு யாஷிதிகளின் முகாம்களை பார்வையிடுகிறார்.

தனது வாழும் கலை இயக்கத்தின் தோழமை இயக்கமான மனித கலாச்சாரத்துக்கான சர்வதேச சங்கம் என்ற அமைப்புடன் இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார். முகாம்களுக்கு எடுத்து செல்ல சுமார் 110 டன்கள் உணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x